New Update
/indian-express-tamil/media/media_files/capyLdo3ijzOjF3EYcqX.jpg)
என்.எஸ்.இ நிஃப்டி 50 162.65 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 24,286.50 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 545.34 புள்ளிகள் அல்லது 0.69% உயர்ந்து 79,986.80 ஆகவும் இருந்தது.
என்.எஸ்.இ நிஃப்டி 50 162.65 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 24,286.50 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 545.34 புள்ளிகள் அல்லது 0.69% உயர்ந்து 79,986.80 ஆகவும் இருந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 162.65 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 24,286.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 545.34 புள்ளிகள் அல்லது 0.69% உயர்ந்து 79,986.80 ஆகவும் காணப்பட்டது.
லார்ஜ்-கேப் மற்றும் மிட்-கேப் பங்குகளின் லாபத்துடன், பரந்த குறியீடுகள் கலப்பு மண்டலத்தில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 921.15 புள்ளிகள் அல்லது 1.77% உயர்ந்து 53,089.25-ல் முடிந்தது.
நிதிச் சேவைகள் மற்றும் வங்கிப் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே சமயம் மீடியா பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
டாடா நுகர்வோர் தயாரிப்புகள், ஹெச்டிசி வங்கி, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
அதேசமயம், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டிவிஸ் லேப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்து காணப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.