New Update
/indian-express-tamil/media/media_files/3ErcpR9HICSJ8b4IO9x6.jpg)
இன்றைய பங்கு வணிகத்தில், நிஃப்டி 23,700க்கு மேல் வணிகமானது. சென்செக்ஸ் 78,000க்கு மேல் கடந்து, பேங்க் நிஃப்டி முதன்முறையாக 52,000ஐ கடந்தது.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 183.45 புள்ளிகள் அல்லது 0.78% அதிகரித்து 23,721.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 712.45 புள்ளிகள் அல்லது 0.92% உயர்ந்து 78,053.53 ஆக காணப்பட்டது.
லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் ஆதாயத்துடன், பரந்த குறியீடுகள் கலப்பு மண்டலத்தில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 902.05 புள்ளிகள் அல்லது 1.74% உயர்ந்து 52,606-ல் முடிந்தது.
நிதிச் சேவைகள் மற்றும் வங்கிப் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் உலோகம் மற்றும் ரியாலிட்டி பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
என்.எஸ்.இ நிஃப்டி 50 0.78% அதிகரித்து 23,721.30 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.92% உயர்ந்து 78,053.53 ஆகவும் இருந்தது.
ஆக்சிஸ் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை என்.எஸ்.இ நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
அதேநேரம் பி.பி.சி.எல், ஐஷர் மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை பின்தங்கின.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.