/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
NSE நிஃப்டி 50 இன்ட்ரா-டே வர்த்தகத்தின் போது 0.78% உயர்ந்து 20,291.55 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் BSE சென்செக்ஸ் 492.75 புள்ளிகள் சேர்த்து 619.481 ஆக காணப்பட்டது.
Share Market News Today | Sensex | Nifty | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை (டிச.1) அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 இன்ட்ரா-டே வர்த்தகத்தின் போது 0.78% உயர்ந்து 20,291.55 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, 134.75 அல்லது 0.67 உயர்ந்து 20,267.90 இல் நிலைத்தது.
அதே நேரத்தில், பிஎஸ்இ சென்செக்ஸ் 492.75 புள்ளிகள் அதிகரித்து 67,481.19 புள்ளிகளில் நிலைத்தது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தலைமையிலான லாபத்துடன் பரந்த குறியீடுகள் உயர்வில் முடிவடைந்தன.
வங்கி நிஃப்டி குறியீடு 332.45 புள்ளிகள் அதிகரித்து 44,814.20 புள்ளிகளில் நிலைத்தது. மீடியா பங்குகள் மற்ற துறைகள் மற்றும் குறியீடுகளில் 2.57% உயர்ந்தது.
இதற்கிடையில், பொதுத்துறை வங்கி, நிதிச் சேவைகள், எஃப்எம்சிஜி மற்றும் ரியாலிட்டி பங்குகளும் கூடின, ஒவ்வொன்றும் 1% க்கு மேல் அதிகரித்தன.
அதே நேரத்தில் ஆட்டோ பங்குகள் திருத்தங்களை எதிர்கொண்டன. ஐடிசி, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் பிரிட்டானி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.
பின்தங்கிய நிலையில் விப்ரோ, ஹெச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை காணப்பட்டன. ஏற்ற இறக்கக் குறியீடு (இந்தியா விக்ஸ்) 2.42% குறைந்து முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.