/indian-express-tamil/media/media_files/2025/05/28/UkRcxfkbKPPrVv46zNdn.jpg)
ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கும் போது அதற்கான செலவும் அணிவகுத்து நிற்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறையாகவே இருக்கிறது என்று பலரும் கூறி நாம் கேட்டிருப்போம். இதனை தடுக்க நம்முடைய சம்பளத்தை எவ்வாறு சரியான முறையில் சேமிக்க வேண்டும் என்று பாஸ்வாலா யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர். அதனை இப்பதிவில் காணலாம்.
நாம் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், அதனை குறிப்பிட்ட சதவீதத்திற்கு பிரித்துக் கொள்ள வேண்டும். அதன்படி, நாம் வாங்கும் ஊதியத்தில் இருந்து 55 சதவீதம் பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிடலாம்.
அடுத்தபடியாக நீண்ட நாள் சேமிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட சதவீதம் பணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். இதற்காக நம்முடைய மொத்த ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர நம்முடைய சுய முன்னேற்றத்திற்காக நாம் சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும். இதற்காகவும் 10 சதவீதம் செலவிட வேண்டும்.
மேலும், பணி ஓய்வுபெற்ற பின்னர் பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்து இருக்காத வகையில் நம்முடைய முதலீட்டு திட்டம் இருக்க வேண்டும். இதற்காகவும் 10 சதவீதம் பணத்தை முதலீடு செய்யலாம். இது நம்முடைய எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.
இவை மட்டுமின்றி பொழுதுபோக்கு மற்றும் நமது மகிழ்ச்சிக்காகவும் சேர்த்து தான் நாம் சம்பாதிக்கிறோம். அந்த வகையில், இது போன்ற தேவைகளுக்காகவும் 10 சதவீதம் பணத்தை நாம் செலவிடலாம். மீதமிருக்கும் 5 சதவீதம் பணத்தை மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக செலவிட வேண்டும்.
இந்த வகையில் நாம் வாங்கும் சம்பளத்தை பிரித்து வைத்திருக்க வேண்டும். இந்த கணக்கு அனைத்தும் சராசரியான சதவீதம் தான். அதன்படி, அத்தியாவசிய செலவுகளில் நீங்கள் 60 சதவீதம் பணத்தை செலவிடலாம். அப்படி செலவிடும் போது மற்ற செலவினங்களில் இருக்கும் சதவீதத்தை அதற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us