/tamil-ie/media/media_files/uploads/2022/11/gold-biscuits-759-1.jpg)
புதன்கிழமை வர்த்தகத்தை இந்திய சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிசம்பர் 19, 2022 முதல் இறையாண்மை தங்கப் பத்திர (SGB) திட்டம் 2022-23 தொடர் IIIஐத் திறக்கும் என அறிவித்துள்ளது. இதன் வெளியீட்டு காலம் டிசம்பர் 27, 2022 அன்று முடிவடையும்.
1 கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.5,409
இறையாண்மை தங்க பத்திர திட்டம் 2022-23 தொடர் III வெளியீட்டின் தொடக்க நாளில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55,500 அல்லது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,550 ஆக உயர்ந்தாலும், பத்திரத்தின் வெளியீட்டு விலை ரூ.5,409ஆக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தள்ளுபடி
மேலும், ஆன்லைனில் விண்ணப்பித்து, டிஜிட்டல் முறையில் விண்ணப்பத்திற்கு பணம் செலுத்தினால், முதலீட்டாளர் ஒரு பத்திரத்திற்கு 50 ரூபாய் தள்ளுபடி பெறுவார்.
இதன் விளைவாக, ஆன்லைன் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராம் தங்கத்தின் வெளியீட்டு விலை ரூ.5,359 ஆக இருக்கும்.
வட்டி, வரி விலக்கு
இறையாண்மை தங்க பத்திர (SGB) முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியையும் பெறுகிறார்கள், முதிர்வு அல்லது திரும்பப் பெறும் வரை ஒவ்வொரு 6 மாதங்களுக்கும், முதலீட்டின் பெயரளவு மதிப்பில் செலுத்தப்படும்.
தங்கத்தை விற்கும் முதலீட்டாளர்கள் தங்கத்தை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து ஆதாயத் தொகையின் மீது குறுகிய கால அல்லது நீண்ட கால மூலதன ஆதாய வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.
அப்போது, SGB முதலீட்டாளர்கள் முதிர்வு காலத்தில் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.