கடன் வட்டி குறைப்பு.. மினிமல் பேலன்ஸ் பிரச்சனைக்கு தீர்வு! எஸ்பிஐ புதிய அறிவிப்புகள்

இனி 15 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது

இனி 15 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
axis bank netbanking

axis bank netbanking

state bank internet banking : கடன்களுக்கான வட்டியை குறைப்பதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 0.75 விழுக்காடு வட்டியை குறைத்தது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

Advertisment

வெளிநாட்டு வங்கியான சிட்டி வங்கி மற்றும் மேலும் 4 பொதுத்துறை வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்தன.இதுவரை 13.75 விழுக்காடாக இருந்த வட்டி இனி 13 விழுக்காடு வசூலிக்கப்படும்.பாரத் ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளும் வட்டி விகித குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது.

சிட்டி வங்கி 0.5 விழுக்காடு வட்டியைக் குறைத்துள்ள நிலையில், இனி 15 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.தனியார் வங்கிகளின் தலைவர்களுடன் நிதித்துறை செயலாளர் அருண் ராமநாதன் ஆலோசனை நடத்திய மறுதினமே சிட்டி வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ அறிவித்தது.

Advertisment
Advertisements

வட்டி இல்லா கடன்! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய சேவை

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடப்பாண்டில் `ரூபே’ கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு விசா, மக்கள் விரும்பத்தக்கதுடர் அல்லது ரூபே கடன் அட்டை வழங்கப்படும். அண்மையில் சிங்கப்பூர், பூடான், ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி அங்கு ரூபே அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனால், அங்கு ரூபே அட்டைகள் மூலம் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: