/tamil-ie/media/media_files/uploads/2019/11/sbi-2.jpg)
Sbi,charges,maintenance,minimum,balance, எஸ்.பி.ஐ, மினிமம்,கணக்கு
எஸ்.பி.ஐ வங்கியில் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகையை பராமரிக்காது விடும் பட்சத்தில் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது.
அதாவது எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு செய்திருக்க வேண்டும். அவ்வாறு குறைந்தபட்ச பேலன்ஸ் தொகையை வைக்க தவறும் பட்சத்தில் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்படும்.
மேலும் மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும் என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதே போல புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய் மினிமம் பேலன்சை வைத்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அவர்களுக்கு அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி, புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சம் 12 ரூபாய் +ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி வெளியிட் தகவலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.