Advertisment

45 நிமிடத்தில் கடன்... எந்த ஆவணங்களும் தேவையில்லை! எந்த வங்கியில் தெரியுமா?

அக்டோபர் வரை நீங்கள் மாத தவனை கட்ட தேவையில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank of india sbi state bank

state bank of india sbi state bank

state bank of india sbi state bank : கொரோனா சோதனைக்காலமான இப்போது பண தேவை இல்லாத நபர்களே இல்லை எனலாம். வீட்டின் பொருளாதார சூழல் மிகவும் பின் தங்கி உள்ளது. கடைகள் வைத்திருப்பருபவர்கள், வியாபாரம் செய்பவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளீர்கள். அப்படிப்பட்டவர்கள் எஸ்பிஐ தரும் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

அதிலும் கடன் பெற எஸ்பிஐ வங்கி கிளைக்கும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

state bank of india sbi state bank : தவணை எப்போது?

எஸ்பிஐயின் இந்த கடன் வசதியில் இருக்கும் மிகப்பெரிய அறிவிப்பு என்ன என்றால் முதல் 6 மாதங்களுக்கு மாத தவனை கட்ட வேண்டாம். உங்கள் மாத தவனை 6 மாதத்துக்கு பிறகு தான் தொடங்கும்.எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த தனிநபர் அவசர கடனை எடுக்கலாம். இந்த அவசரக் கடன் ஆண்டுக்கு 7.25 சதவிகிதம் என்ற வட்டி விகதத்தில் கிடைக்கிறது.

தனிநபர் கடன் ரூபாய் 2 லட்சம் வரை, ஓய்வூதிய கடன் ரூபாய் 2.5 லடசம் வரை பெறலாம். அதே போல் சேவை வகுப்பு (Service Class) ரூபாய் 5 லட்சம் வரை விண்ணப்பிக்கலாம்.

உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் PAPL எண்ணை தட்டச்சு செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை தட்டச்சு செய்து அதை 567676 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். நீங்கள் கடன் பெற தகுதியானவரா இல்லையா என்பதை வங்கி தெரிவுக்கும்.

எஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment