/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-18.jpg)
State of bank india
எஸ்.பி.ஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக உள்ளது.சென்ற மாதம் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிவுறுத்தலில், ஜூலை 1-ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
ஏற்கனவே எஸ்.பி.ஐ , வங்கி விடுத்திருந்த அறிவித்தலில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, யோனோ செயலி சேவை மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விலக்கு அளித்துள்ளது.
ஏ.டி.எம் கட்டணம், குறைந்தபட்ச கணக்குத்தொகை அபராதம் என்று சமீப காலமாக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்தித்த நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு இனிப்பானதாக அமைந்துள்ளது.
இந்நிலையில், விரைவில் மற்ற பொதுத்துறை வங்கிகளும் இதேபோன்ற கட்டண விலக்கு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.