/tamil-ie/media/media_files/uploads/2022/07/markets.png)
மும்பை பங்குச் சந்தை
வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தில் ஐ.டி., மற்றும் வங்கி பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (செப்.9) உயர்வுடன் பங்கு வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நிறைவில் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 104.92 புள்ளிகள் உயர்ந்து 59793.14 எனவும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 34.6 புள்ளிகள் அதிகரித்து 17833.35 எனவும் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையில் அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா நிறுவன பங்குகள் அதிக லாபத்திலும் , ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், பிபிசிஎல் நிறுவன பங்குகள் அதிகபடியாக நஷ்டத்தையும் சந்தித்தன.
இதில் அதிகப்பட்சமாக பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் ரூ.76.75 (1.06 சதவீதம்) நஷ்டத்தையும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்குகள் 45.55 (1.03 சதவீதம்) லாபத்தையும் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனி லிவர், ஐசிஐசிஐ நிறுவன பங்குகள் அதிக லாபத்தையும், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவன பங்குகள் அதிகப்படியான நஷ்டத்தையும் சந்தித்தன.
இதில் ஹெச்சிஎல் டெக் நிறுவன பங்குகள் 1.90 (17.7) சதவீதம் வரை உயர்வை கண்டு ரூ.948.80 காசுகளாக உள்ளது. மறுபுறம் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 1.03 சதவீதம் (ரூ.74.45) வரை சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.7183.55 ஆக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.