/tamil-ie/media/media_files/uploads/2022/07/markets.png)
மும்பை பங்குச் சந்தை
திங்கள்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் லாபத்தில் நிறைவு செய்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 49 புள்ளிகள் வரை குறைந்து, 59245.98 எனவும், தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிஃப்டி 10 புள்ளிகள் வரை சரிந்து 17,655.60 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையை பொறுத்தவரை மொத்தமுள்ள 30 பட்டியலிடப்பட்ட பங்குகளில் 11 நிறுவன பங்குகள் லாபத்தில் இயங்கின. மீதமுள்ள 19 பங்குகள் சரிவை கண்டன.
அந்த வகையில் என்டிபிசி பங்குகள் 2.6 சதவீதம் உயர்ந்து 168.40 எனவும், பார்தி ஏர்டெல் பங்குகள் 2.4 சதவீதம் உயர்ந்து 758.10 எனவும், டாடா ஸ்டீல்ஸ் பங்குகள் 1.6 சதவீதம் உயர்ந்து 108.65 எனவும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.9 சதவீதம் உயர்ந்து 2593.25 எனவும் பவர் கிரிட் பங்குகள் 0.7 சதவீதம் உயர்ந்து 225.10 எனவும் இன்றைய (செப்.6) வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் சென்செக்ஸில் பஜாஜ் ஃபின்சர்வ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலிவர், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் கோடாக் மகிந்திரா பங்குகள் அதிகபட்ச சரிவை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவன பங்குகள் லாபத்திலும், அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் நஷ்டத்திலும் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.