ஒளிர்ந்த வங்கிப் பங்குகள்: ஆனாலும் ஆக்ஸிஸ் ஏமாற்றம்..!

இரு பங்குச் சந்தைகளிலும் அதிகப்பட்சமாக பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 1.59 சதவீத உயர்வை கண்டன.

இரு பங்குச் சந்தைகளிலும் அதிகப்பட்சமாக பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 1.59 சதவீத உயர்வை கண்டன.

author-image
WebDesk
New Update
Stock Market Today 16 January 2023

மும்பை பங்குச் சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் ஏமாற்றம் அளித்தன.
இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வர்த்தகத்தில் துள்ளி குதித்தன. மும்பை பங்குச் சந்தை 37.87 (0.06) உயர்வுடன் வர்த்தகமாகி 60298 என வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 12.05 (0.07) புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகின.
என்எஸ்இ பொறுத்தமட்டில் அதானி, ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்திலும் வணிகமாகின.

Advertisment

அதேபோல் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்சிஎல் டெக், இந்துஸ்தான் யூனிலிவர் பங்குகள் நஷ்டத்திலும் வர்த்தகமாகின.

இரு பங்குச் சந்தைகளிலும் அதிகப்பட்சமாக பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 1.59 சதவீத உயர்வை கண்டன. தற்போது அந்நிறுவனத்தின் பிஎஸ்இ பங்கு ரூ.733.25 ஆக உள்ளது.
தேசிய பங்கு சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் ரூ..7.05 (0.91) குறைந்து பங்கு ஒன்று ரூ.765.05 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nse Bombay Stock Exchange Sensex

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: