scorecardresearch

உளுந்தூர்பேட்டையில் தைவான் கம்பெனி: ரூ2300 கோடி முதலீடு; 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அடுத்த 12 ஆண்டுகளில், இந்த கூட்டாண்மை மூலம் தோல் அல்லாத காலணி துறையில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

Taiwans Pou Chen footwear brand to set up a plant in Tamil Nadu
தைவான் நாட்டைச் சேர்ந்த பௌ சென் குழுமம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுதிட்டது.

தைவானின் Pou Chen குழுமத்தின் துணை நிறுவனமான High Glory Footwear, தமிழ்நாட்டில் ஒரு உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
இந்த ஆலை ரூ.2,302 கோடி முதலீட்டில் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்படும். Pou Chen Corporation உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தியாளர் ஆவார்.

2022 இல், இது நைக், அடிடாஸ், ரீபோக் மற்றும் ஆசிக்ஸ் போன்ற டஜன் கணக்கான சர்வதேச பிராண்டுகளுக்காக 272.7 மில்லியன் ஜோடிகளை உற்பத்தி செய்தது.
உலகளவில் சீனா, வியட்நாம், வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

இந்நிறுவனம் திங்கள்கிழமை (ஏப்.16) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாநில அரசுடன் ‘கட்டமைக்கப்பட்ட தொகுப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது.
அடுத்த 12 ஆண்டுகளில், இந்த கூட்டாண்மை மூலம் தோல் அல்லாத காலணி துறையில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Taiwans pou chen footwear brand to set up a plant in tamil nadu