/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-nadu-stalin.jpg)
திருவள்ளூரில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில் 52 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.1,891 கோடி செலவில் அறை குளிரூட்டிகள் மற்றும் கம்ப்ரசர்களுக்கான புதிய உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா நிறுவன அதிகாரிகள் மற்றும் மாநில அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிறுவன அதிகாரிகளின் கூற்றுப்படி, தொழிற்சாலை சுமார் 2,000 வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதில் 60 சதவீதம் பெண் ஊழியர்களை உள்ளடக்கியது.
தொடக்க விழாவில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழில்துறை) எஸ்.கிருஷ்ணன், மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் குழுமத் தலைவர் யாசுமிச்சி தாசுனோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற கனவை நனவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.
மாநில அரசாங்கத்தின் வெளியீட்டின்படி, இந்த வசதியில் வணிகரீதியான உற்பத்தி அக்டோபர் 2025 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.