ஆயுத பூஜையையொட்டி, ஈரோடு காய்கறி சந்தையில் விற்பனை களைகட்டி வருகிறது. இந்த நிலையில், சாம்பல் பூசணிக்காய், வாழைக்கன்று வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பூசணிக்காய் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அதேபோல், ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பொரி பாக்கெட் ரூ.30க்கும், 7 கிலோ கொண்ட பொரி மூட்டை ரூ.650க்கும் விற்பனையாகி வருகிறது.
பூக்கள் விலை
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. மல்லி, கனகாம்பரம் பூக்கள் கிலோ ரூ.1000 க்கு விற்பனையாகி வருகின்றன.
நவராத்திரி
நமது பக்தி இலக்கியங்களில் காரியத்தடை நீங்க கணபதிபூஜை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நம் துன்பங்கள் நீங்கிட துர்கை வழிபாடு அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நவராத்திரி விழாவில் ஆயுதப் பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, துர்காஷ்டமி உள்ளிட்ட விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எனவே இந்த நாள்களில் மகாலட்சுமி துர்க்கை சரஸ்வதி வணங்குவதால் கல்வி, செல்வம், இன்பம் ,ஞானம் ஆகியவை ஒரு சேர கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“