Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

பான்கார்டு இணைக்கவில்லை என்றால் 20% பிடித்தம் உண்டு; FD-யில் முதலீடு செய்ய இதை அறிந்து கொள்ளுங்கள்

DICGC சட்டத்தின் கீழ் வங்கி திவாலாகும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இன்சூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

Written byWebDesk

DICGC சட்டத்தின் கீழ் வங்கி திவாலாகும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இன்சூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

author-image
WebDesk
05 Jul 2021 16:55 IST

Follow Us

New Update
State bank of india, fixed deposits, interest rates, post offices bank account, SBI, FD, ICICI, FIXED DEPOSIT, INTEREST RATE, Fixed Deposit Interest Rates, SBI news, SBI news in tamil, SBI latest news, SBI latest news in tamil

தற்போது, ​​வங்கிகளின் நிலையான வைப்பு தொகைக்கு வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன. ஆனால் பல முதலீட்டாளர்களுக்கு, தங்களுடைய பணத்தை சேமிக்க முதல் சாய்ஸ் FD தான். பாதுகாப்பானது மற்றும் உத்தரவாதமான வருமானம் தருவதால் முதலீட்டாளர்களால் விரும்பப்படுகிறது.

Advertisment

பல முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகளில் பணத்தை வைத்திருப்பதை விட, நிலையான வைப்புகளில் பணத்தை வைத்திருப்பதை விரும்புகிறார்கள். குறைந்த கட்டணங்களுக்கு தீர்வு காண விரும்புகிறார்கள். நீங்கள் ஒரு வங்கியில் நிலையான வைப்புத்தொகை கொண்ட முதலீட்டாளராக இருந்தால் அல்லது ஒரு வங்கியில் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் திறக்க விரும்பினால், கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் FD கணக்கு ஏன்?

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீட்டு தொகையை பாதுகாக்க விரும்புவோருக்கு வங்கி எஃப்.டி பொருந்தும். வங்கி எஃப்.டி.யில் வைக்கப்படும் பணம் நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்க உங்களுக்கு உதவாது. வங்கி எஃப்.டி.களின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒரு நிலையான வருவாயின் உறுதி உள்ளது மற்றும் முதலீடு செய்யப்பட்ட அசல் பாதுகாப்பாக இருக்கும். பல முதலீட்டாளர்கள் தங்கள் நிதியில் ஒரு பகுதியை வங்கி எஃப்.டி.களில் அவசரகால பயன்பாட்டிற்கு மட்டுமே வைத்திருக்கிறார்கள், அதோடு குறுகிய கால நிதிகள் அல்லது உபரி நிதிகளில் சில பகுதியை வைத்திருக்கிறார்கள்.

எவ்வளவு பாதுகாப்பானது?

ஒரு வங்கி திவால் ஆனாலோ அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் செய்த டெபாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனால், தத்தம் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை இன்சூரன்ஸ் ஆக உடனடியாகக் கிடைக்கும். மத்திய அரசு DICGC சட்டத்தின் கீழ் செய்யப்பட்டு உள்ள புதிய மாற்றத்தின் படி வங்கி திவாலாகும் பட்சத்தில், வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இன்சூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனவே மக்கள் இனி எவ்விதமான பயமும் இல்லாமல் ஒரு வங்கியில் 5 லட்சம் ரூபாய் வரையில் சேமிக்கலாம்.

வட்டி விகிதங்கள் மற்றும் வருவாய்

Advertisment
Advertisements

வட்டியை மாதா மாதம் பெறுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, ஆண்டுக்கு ஒருமுறை பெறுவது மற்றும் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பெறுவது என நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் உங்கள் முதலீட்டுத் தொகை லாக் செய்யப்பட்டவுடன், வட்டி விகிதங்கள் அல்லது சந்தை ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் அது பாதிக்கப்படாது. எனவே, உங்கள் வைப்புத்தொகையில் உத்தரவாதமான வருமானத்தை நீங்கள் பெற முடியும், மேலும் நீங்கள் கால அடிப்படையில் அல்லது மெச்சூரிட்டியில் உங்கள் வட்டியை பெற தேர்வு செய்யலாம். வரி சேமிப்பு எஃப்டி-களில் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். வட்டித் தொகை உங்கள் வருடாந்திர வருமானத்தில் சேர்க்கப்படும். மேலும் உங்கள் வருமான வரி விதியின் படி வரி விதிக்கப்படும். அதில் செலுத்த வேண்டிய வட்டி காலாண்டு அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

ஆன்லைன் FD

நிலையான வைப்புத்தொகை கணக்கை ஆன்லைனில் திறப்பது மற்றும் பராமரிப்பது என்பது முதலீடு செய்வதற்கும் சேமிப்புகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பான மற்றும் எளிதான வழியாகும். வங்கி கணக்கு வைத்திருப்போர் PAN அல்லது ஆதார் வழங்குவதன் மூலம் உங்கள் KYCஐ நிறைவு செய்திருப்பார். முதலீட்டுத் தொகையை வங்கியின் சுய கணக்கிலிருந்து எஃப்.டி கணக்கிற்கு நேரடியாக மாற்ற முடியும், முதலீடுகளின் ஆதாரத்தைக் காட்டும் சான்றிதழ் உடனடியாக உருவாக்கப்படும். முதிர்ச்சியடைந்தவுடன், மீட்பின் வருமானம் நேரடியாக ஒரே கணக்கில் மட்டுமே செல்லும். அதிக வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகள் இருந்தால், வீடியோ KYC மூலம் ஆன்லைனில் வங்கிக் கணக்கைத் திறப்பது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.

நிரந்தர வைப்பு நிதி வட்டிக்கு வரிப் பிடித்தம் எவ்வளவு?

ஒருவருக்கு நிரந்தர வைப்பு நிதி கணக்கு மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வரி வசூலிக்கப்படும். வருமான வரி சட்டப்பிரிவு 194A-ன் கீழ் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூலம் ஒருவருக்குக் கிடைக்கும் வட்டி ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் சென்றால் அதற்கு வரி வசூலிக்கப்படும். பான் கார்டு இணைக்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதி கணக்கு என்றால் 10% தொகையை வங்கி வரியாக பிடித்தம் செய்யும். பான் கார்டு இணைக்கத் தவறினால் 20% தொகை வரியாக பிடித்தம் செய்யப்படும். இந்த வரியிலிருந்து மூத்த குடிமக்களுக்கு வருமான வரித்துறை தளர்வு அளிக்கிறது. அதாவது, மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை நிரந்தர வைப்பு நிதி மூலம் வட்டி பெறலாம். அதற்கு மேல் சென்றால் வரி கழிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Interest Rates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!