இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர்ப்பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வந்தது.
இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்து, சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது. இந் நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (ஜூலை 5) மீண்டும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.