/tamil-ie/media/media_files/uploads/2022/09/Markets-Reuters.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022
இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 30.81 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 58,191.29 எனவும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 17.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,314.65 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் லாபத்திலும் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்.சி.எல்., டெக், ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தையும், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பி.பி.சி.எல். நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் டைட்டன் கோ பங்குகள் அதிகப்பட்சமாக 5.31 சதவீதம் (ரூ.137.65) உயர்வு கண்டு ஒரு பங்கின் விலை ரூ.2,730.50 ஆக உள்ளது.
அதேபோல் கோல் இந்தியா, பி.பி.சி.எல் நிறுவன பங்குகள் முறையே 1.63 மற்றும் 1.52 சதவீதம் சரிவை கண்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.