Advertisment

வாரத்தின் 2வது நாளாக சந்தைகள் உயர்வு.. 18 ஆயிரத்தை கடந்த நிஃப்டி

கிட்டத்தட்ட 48 நாள் வர்த்தகத்துக்கு பிறகு நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளை திங்கள்கிழமை தாண்டியது.

author-image
WebDesk
New Update
Stock Market Today 16 January 2023

மும்பை பங்குச் சந்தை

நவம்பர் மாதத்தின் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை (நவ.1) வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 374.76 புள்ளிகள் உயர்ந்து, 61,121.35 எனவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 133.20 புள்ளிகள் உயர்ந்து 18,145.40 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Advertisment

கிட்டத்தட்ட 48 நாள் வர்த்தகத்துக்கு பிறகு நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளை திங்கள்கிழமை தாண்டியது. அது இன்றும் தொடர்கிறது. மும்பை பங்குச் சந்தையில் என்டிபிசி, பவர் கிரிட், டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ, உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.

மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா, ஈஸர் மோட்டர்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் நஷ்டத்திலும் வணிகமாகின.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment