/tamil-ie/media/media_files/uploads/2022/09/Markets-Reuters.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022
இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 518.64 (0.84 சதவீதம்) புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 147.95 (0.45 சதவீதம்) புள்ளிகளும் வீழ்ச்சியை சந்தித்தது.
மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இந்த் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் பார்த்தன.
தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பார்த்தி ஏர்டெல், பிபிசிஎல், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 0.84 சதவீதமும், தேசிய பங்குச் சந்தை 0.45 சதவீதமும் சரிவை கண்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.