அவசர பணத்தேவைக்கு நண்பர்கள், உறவினர்களே கைவிரிக்கும் நிலையில், மொபைல் செயலிகள் நமக்கு உதவிபுரிகின்றன. உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கும் 5 பெஸ்ட் ஆப்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Top Five Personal Loan Mobile Apps
1.ஸ்மார்ட் காயின் (Smart Coin)
2.கேபிடல் பர்ஸ்ட்(Capital First)
3.கிரீடி (Credy)
4.கேஷ் இ (Cash E)
5.கேஷியா (Cashiya)
இந்த செயலிகள் குறித்து விரிவாக காண்போம்...
ஸ்மார்ட் காயின் (Smart Coin)
Smart Coin செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த அடுத்த கணம், தனிநபர் கடன் பெறலாம். இதில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும். ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் கிடைக்கும்.
கேபிடல் பர்ஸ்ட்(Capital First)
இந்த செயலியில் தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்கலாம். இதில் கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்களும் தெரியப்படுத்தப்படும்.
கிரீடி (Credy)
கிரீடி செயலியில், ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் வெறும் ஒரு நிமிடத்தில் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. மாதம் 1 – 1.5% வரை வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த செயலியை பயன்படுத்துவதற்கு, வாடிக்கையாளரின் மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 இருக்க வேண்டும். சென்னை அல்லது பெங்களூரில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும் என்பதும் விதி.
கேஷ் இ (Cash E)
கேஷ் இ உடனடி கடன் வழங்கும் செயலி, மிக குறுகிய காலத்திற்கு கடன் வழங்கும் செயலியாக உள்ளது. இது ரூ.10,000 முதல் ரூ.2,00,000 என்ற வரம்பில் கடன் வழங்குகிறது. பான் எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பள சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் போன்ற 5 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
கேஷியா (Cashiya)
குறுகிய கால தனிநபர் கடனை வழங்குவது மட்டுமில்லாமல், வரவு மற்றும் செலவுகளை மேலாண்மை செய்யவும் கேஷியா செயலி, பயன்படுகிறது. இதில், மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை பெற முடியும். மேலும் முதலீடுகள் மற்றும் பணி ஓய்வு பெற்றபின் இருக்கும் சேமிப்புகள் போன்றவற்றையும் திட்டமிட முடியும்.