Advertisment

12.28 லட்சம் பயணிகள்.. புதிய உச்சத்தில் திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையம் நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 2022 வரை 12.28 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy Airport has handled more than 12 lakh passengers in the current financial year till December 2022

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே 24 சேவைகள் இயக்கப்படுகின்றன.

திருச்சி சர்வதேச விமான நிலையம் ஜனவரி மாதத்தில் கோவிட்-19க்கு முந்தைய பயணிகள் போக்குவரத்திற்கு கிட்டத்தட்ட திரும்பியுள்ளது. சர்வதேச விமானங்கள் இன்னும் முழுமையாகத் தொடங்கப்படவில்லை என்ற போதிலும், விமான நிலையம் 1.50 லட்சம் பயணிகளைக் கையாள முடிந்தது.

Advertisment

இது தொற்றுநோய்க்கு முந்தைய பயணிகள் போக்குவரத்தில் (1.59 லட்சம்) 94.3% ஆகும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, கொழும்பு, குவைத், அபுதாபி, மஸ்கட் மற்றும் தோஹா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கோவிட்-19 காலகட்டத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட சர்வதேச சேவைகளின் எண்ணிக்கை 91 ஆக இருந்தது, ஆனால் தொற்றுநோய் காரணமாக அது 80 ஆகக் குறைந்துள்ளது.

கொரானா தொற்றுக்கு பிறகு நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது திருச்சி-சிங்கப்பூர் பிரிவுகளுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து 100% மீண்டும் தொடங்கி உள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தில் சிங்கப்பூர் பெரும் பங்கை வழங்குகிறது.

திருச்சி - சிங்கப்பூர் இடையே தற்போது 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, துபாய் துறையும் அதன் அனைத்து சேவைகளையும் மீண்டும் தொடங்கியுள்ளது.

இருப்பினும், கோலாலம்பூர் மற்றும் கொழும்பு விமான நிலையங்கள் இன்னும் கோவிட்-க்கு முந்தைய எண்ணிக்கையை எட்டவில்லை. திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே 24 சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற உள்நாட்டுத்துறையில், கொரோனா தொற்றுநோய்க்கு முன் இயக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 49 இலிருந்து 55 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, கோவிட்-க்கு முந்தைய காலத்தில் இயக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கையை விமான நிலையம் ஏற்கனவே விஞ்சிவிட்டது.

நாங்கள் ஒவ்வொரு நாளும் 5,000 பயணிகளை கையாளுகிறோம், இதில் 1,000 உள்நாட்டு சேவைகள் உட்பட திருச்சி விமான நிலையம் நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 2022 வரை 12.28 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டுள்ளது.

இது 2020 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 13.14 லட்சமாக இருந்தது. இதனால், கோவிட்-க்கு முந்தைய காலத்தை விட சர்வதேச சேவைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் திருச்சி விமான நிலையம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என விமான நிலைய இயக்குனர் பி.சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment