Advertisment

பி எஃப் திட்டத்தில் முக்கிய மாற்றம்; இனி இந்த சேவை கிடையாது!

கணக்குகளை முடக்குவதற்கும் நிறுவனம் SOP ஐ வழங்கியுள்ளது. இதன் கீழ், முடக்கப்பட்ட கணக்கைச் சரிபார்ப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
efpo Employees' Provident Fund Organisation, epf member login, pf office chennai, epfo login for employees

இ.பி.எஃப்.ஓ திட்டத்தில் இரண்டு மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இ.பி.எஃப்.ஓ திட்டத்தில் இரண்டு மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. முதலாவது, கோவிட் முன்பணத்தை திரும்பப் பெறுவதற்கான வசதி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கணக்குகளை முடக்குவதற்கும் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (SOP) வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

கோவிட் அட்வான்ஸ் நிறுத்தம்

கோவிட் (COVID-19) பெருந்தொற்று நோய்களின் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, அரசாங்கம் ஊழியர்களுக்கு COVID-19 முன்பணத்தை திரும்பப் பெறுவதற்கான வசதியை வழங்கியது.

இதன் கீழ், எந்தவொரு EPFO உறுப்பினரும் தேவைப்படும் பட்சத்தில் கோவிட் முன்பணமாக தனது PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். தற்போது இந்த வசதி நிறுத்தப்பட்டுள்ளது. எனினும். இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

14 நாள்கள் காலக்கெடு

கோவிட்-19 அட்வான்ஸ் ஃபண்டுடன் (EPFO கோவிட் அட்வான்ஸ் ஃபண்ட் திரும்பப் பெறுதல்), EPFO மற்றொரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், கணக்குகளை முடக்குவதற்கும் நிறுவனம் SOP ஐ வழங்கியுள்ளது. இதன் கீழ், முடக்கப்பட்ட கணக்கைச் சரிபார்ப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது.

இந்த காலக்கெடுவை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க விருப்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment