Advertisment

ரூ.4500 கோடி விலை; ஸ்டெர்லைட் ஆலை விற்பனை?

வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை ரூ.4500 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Vedanta May Sell Tamil Nadu Copper Plant For RS4500 Crore

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisment

இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து வேதாந்தாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாநில அரசு தாமிர உருக்காலையின் செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்தியது.

எனினும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் வேதாந்தா ஆலையை அதன் பராமரிப்பிற்காக மீண்டும் திறக்க அனுமதித்தது.

தற்போது இந்த ஆலையை ரூ.4,500 கோடிக்கு விற்க வேதாந்தா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஆலை செயல்படாததால், முதலாளிகளிடம் இருந்து எந்தவொரு சாத்தியமான பதில்களும் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு விஷயங்கள் மாறிவிட்டதால் மாற்றங்கள் எதுவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதாவது, வேதாந்தாவின் 2.5 பில்லியன் டாலர் கடன் பில் பெரும் ஆபத்தாக மாறியிருக்கும் வேளையில் தமிழகத்தில் ஆலை விற்பனை பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.

இந்த ஆலை மூடப்பட்டதால் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sterlite Copper Industries
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment