New Update
![corona virus, lockdown, corona hotspot, chennai,, koyembdu market, thirumalisai, chennai, corporation, vegetable, pricehike, horticulture, outlets, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-07T102142.744.jpg)
கோயம்பேட்டியில் காய்கறி விலை ஏற்றத்துடன் விற்பனையானது
00:00
/ 00:00
கோயம்பேட்டியில் காய்கறி விலை ஏற்றத்துடன் விற்பனையானது
சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் இன்று (மே 19, 2024) காய்கறிகள் ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டன.
அதாவது கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகரித்து காணப்பட்டன. முகூர்த்த நாள் என்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக வணிகர்கள் கூறுகின்றனர். மேலும், வாடிக்கையாளர்கள் சிலர் இந்த விலை உயர்வை நாள்கள் எதிர்பார்க்கவில்லை” என்றனர்.
அந்த வகையில் இன்று தக்காளி பெட்டி ரூ.100ம், கிலோ ரூ.10 வரையும் அதிகரித்து காணப்பட்டது. ஆக தக்காளி கிலோ ரூ.35 வரை விற்பனையானது. தொடர்ந்து, சின்ன வெங்காயம், முருங்கை கிலோ ரூ.50க்கும், எலுமிச்சை கிலோ ரூ.140க்கும், அவரைக் காய் ரூ.90க்கும், பச்சை மிளகாய் ரூ.20க்கும், இஞ்சி ரூ.150க்கும், மாங்காய் ரூ.40க்கும் விற்பனையானது. மேலும், பீன்ஸ் ரூ.200க்கும் விற்பனையானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.