/tamil-ie/media/media_files/uploads/2022/11/kerala-lottery.jpg)
கேரள விஷு லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
கேரள அரசின் லாட்டரித்துறை ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை அறிவித்து, கோடிக்கணக்கில் பரிசுகளை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், விஷு லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசாக ரூ.12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பம்பர் லாட்டரி டிக்கெட் 6 தொடர்களில் விற்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை பரிசுத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்த பரிசுகளின் எண்ணிக்கை 4,08,264 ஆகும். விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் ஆறு தொடர்களில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் பரிசான 12 கோடி ரூபாயை தவிர, ஒவ்வொரு தொடரிலும் இரண்டு முதல் நான்கு பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் பரிசாக 6 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். தொடர்ந்து, மூன்றாம் பரிசாக 10 லட்சம் ரூபாய் தலா 6 பேருக்கு வழங்கப்படும். 4ஆவது பரிசாக 6 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆறுதல் பரிசுகளும் உள்ளன.
கேரள அரசு ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடைக்கால லாட்டரி என லாட்டரிகளில் பல கோடி ரூபாய்களை பரிசாக வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் பரிசுக்கான குலுக்கல் நடைபெறுகிறது. மார்ச் மாதத்தில் கோடைக்கால பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us