/tamil-ie/media/media_files/uploads/2018/12/idea-40.jpg)
எஸ்.பி.ஐ
பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடனுக்கான வட்டியை 8 விழுக்காடாக குறைத்து அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு:
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பின் படி புதிதாக வீடு கட்ட, அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 8% வட்டி வசூலிக்கப்படும். இந்த சிறப்பு வட்டி சலுகை, முதல் வருடத்திற்கு மட்டும் பொருந்தும். அதற்கு பிறகு கடன் வாங்கும் திட்டத்தை பொருத்து கூடுதல் வட்டி வசூலிக்கப்படும்.
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு வழக்கும் அல்டிமேட் திட்டங்கள் என்னென்ன?
இந்த வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களும், புதிய திட்டத்தின் சலுகையை பெறலாம். இவர்கள் ஏற்கனவே வாங்கிய மொத்த கடனில் 10% கடன் தொகைக்கு மட்டுமே, ( அதிகபட்சம் ரூ.5 லட்சம்) இந்த சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.
தற்போது ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட கடனுக்கும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு வேறு வேறு வட்டி வசூலிக்கப்படுகிறது. இவர்களுக்கும் சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.
படியுங்கள்.. கடன் வேண்டுமா? ஐசிஐசிஐ ஏடிஎம் போனால் போதும்!
இதே போல் சிறு நடுத்தர தொழில் பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கடனுக்கும் ஒரு வருடத்திற்கு சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும். இந்த கடனுக்கு 8 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.