Tax Saving Investment | 2023-24 நிதியாண்டில் வரிச் சேமிப்பு முதலீடுகளைச் செய்யவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், மார்ச் 31 வரை இதைச் செய்யலாம்.
FY24 முடிவிற்குப் பிறகு செய்யப்படும் முதலீடுகள், FY24க்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, பழைய வரி முறையின் கீழ் விலக்குகளைப் பெறுவதற்குத் தகுதி பெறாது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிகளைச் சேமிக்க சில வழிகள் உள்ளன.
தேசிய ஓய்வூதிய அமைப்பு
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) தனிநபர்களை ஓய்வூதியத்திற்காக சேமிக்க ஊக்குவிக்கிறது. NPSக்கு அளிக்கப்படும் பங்களிப்புகள் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்குகளுக்குத் தகுதிபெறும்.
இந்தத் திட்டம் பிரிவு 80 CCD (1B) இன் கீழ் 50,000 கூடுதல் வரி விலக்கையும் அனுமதிக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
இது மும்மடங்கு வரிச் சலுகைகள் கொண்ட திட்டமாகும். பிரிவு 80C இன் கீழ் முதலீட்டின் போது கழித்தல், பெறப்படும் வட்டிக்கு வரி இல்லை.
PPF திட்டமானது மற்ற முதலீட்டு விருப்பங்களான பரஸ்பர நிதிகள், பங்குகள் அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அல்லது SCSS என்பது 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அரசாங்க திட்டமாகும்.
இந்தத் திட்டம் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் முதலீட்டு விருப்பத்தை வழங்குகிறது, மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு காலத்திலும் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது ஆண்டுக்கு 8.2% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்ச வருடாந்திர வைப்பு வரம்பு ரூ. 1.5 லட்சம் மற்றும் குறைந்தபட்சத் தேவை ரூ. 250 ஆகும்.
காப்பீட்டு திட்டங்கள்
பெரும்பாலான காப்பீட்டு திடடங்களின் பிரிமீயம் வரி சேமிப்பின் கீழ் வருகிறது. இது பொதுவாக நீண்ட கால திட்டமாக கருதப்படுகிறது.
வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்
வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் . 5 வருட லாக்-இன் காலத்துடன் கூடியது ஆகும். இதில், அதிகபட்சமாக 1.5 லட்சத்தை 80C இன் வரிச் சலுகையாக கோரலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
இந்தச் சான்றிதழ்களை இந்தியா முழுவதிலும் உள்ள எந்த தபால் நிலையத்திலிருந்தும் வாங்கலாம். அவை ரூ.100 முதல் ரூ.10,000 வரையிலான மதிப்புகளில் கிடைக்கின்றன, இதனால் பல்வேறு பொருளாதார பின்னணியில் உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும். என்எஸ்சியின் காலம் 5 ஆண்டுகள்.
ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்
ஈக்விட்டி-லிங்க்ட் சேவிங் ஸ்கீம் (ELSS) என்பது ஒரு வகையான பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும், இது மூன்று வருடங்களில் குறைந்த லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது.
இதில் வட்டி முக்கியமாக கருதப்படுகிறது. ஆகையால், இது ஒரு கவர்ச்சிகரமான வரி சேமிப்பு விருப்பமாக கருதப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.