/tamil-ie/media/media_files/uploads/2023/01/nbfc1_LIC_Money.jpg)
மே 2023 இல் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய சில வங்கிகள் உள்ளன.
நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை நினைவு கூரும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கென பிரத்யேக சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமியர் பெயரில் ரூ.2 லட்சம் வரை 2 ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்யலாம்.
இதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கிகளுடன் ஒப்பிடுகையில் நல்ல வட்டி ஆகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், முதல் ஆண்டு ரூ.15,427ம் இரண்டாம் ஆண்டும் அதே வட்டியும் கிடையும்.
ஆக நீங்கள் செய்த முதலீடு இரண்டே ஆண்டுகளில் ரூ.2.32 லட்சமாக பெருகிவிடும்.
இந்தத் திட்டத்தில் முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படுமா? அல்லது வட்டிக்கு வரி பிடித்தம் உண்டா? என்பன போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.
இருப்பினும் இத்திட்டத்துக்கு வரி விலக்கு கிடைக்கும் என்றே பலரும் நினைக்கின்றனர்.
இந்தத் திட்டம் ஒவ்வொரு அஞ்சல் அலுவலகங்களிலும் குறிப்பிட்ட நாள்களுக்கு கிடைக்கும். இத்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குகிறது.
முதலீட்டாளர்கள், பெண்கள், சிறுமிகள் பெயரில் முதலீடு செய்து நல்ல ரிட்டன் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.