work from home jobs : பணம் வாழ்க்கையில் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பணத்தை சம்பாதிக்க தான் கோடீஸ்வரன்கள் தொடங்கி மிடில்கிளாஸ் மனிதர்கள் வரை அனைவரும் ஓடிக் கொண்டுடிருக்கிறார்கள். படிப்பதில் தொடங்கி உண்வு, ஆடை, நல்லது, கேட்டது என பணம் இல்லாமல் எதுவும் இங்கு நடப்பதில்லை.
Advertisment
முன்பெல்லாம் படித்து விட்டால் போதும் நல்ல வேளை கிடைத்துவிடும், கை நிறைய சம்பாதிக்கலாம். வீடு வாங்கிடலாம், கல்யாணம் பண்ணிடலாம் என எகப்பட்ட பிளான்களை போட்டு விடலாம். ஆனால், இப்போதெல்லாம் முதலில் வேளை கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்றால் அது சந்தேகம் தான். ஒருவேளை அப்படி வருமானம் வந்தாலும் இருக்குற விலைவாசியில் வீடு வாங்குவது எல்லாம் எட்டா கனவாகி போகிறது. பிரைவைட் வேலை என்றால் அதை விட கொடுமை. எப்போதும் வேலை போகும் என்பது கூட தெரியாது.
அதுவும் இந்த கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி எத்தனையோ நிறுவனங்கள் சொந்த ஊருக்கு மூட்டை முடிச்ச கட்ட கிளம்பியாச்சு. இதனால் வேலை இழந்த இளைஞர்களும் ஏராளம். கவலைய விடுங்க. இப்ப ட்ரெண்டிங்கே work from home தான்.
அப்படி வீட்டில் இருந்தப்படியே அதிக லாபத்தை தரக்கூடிய தொழில்களை பார்க்கலாம் வாங்க.
Advertisment
Advertisements
1. air bnb :
உங்கள் வீட்டில் எக்ஸ்ர்டாவாக அனைத்து வசதிகளுடன் கூடிய ரூம் இருந்தால் போதும். நீங்கள் அதை விசிட்டர்ஸ் தங்க அனுமதித்தால் உங்களால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும். ஆம், இந்த air bnb ஆப்பில் நீங்கள் இருக்கும் இடம், மற்றும் 1 நாளைக்கு ரூம் வாடகை எவ்வளவு என்று ? என்ற அனைத்து விவரங்களையும் இந்த ஆப்பில் பதிவு செய்தால் போதும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்க ஹோட்டல் அல்லது விடுதிகளை தேடும் போது உங்களின் ரூம் ரெண்ட் மற்றும் வசதிகள் அவர்களுக்கு தெரிய வரும். இதன் மூலம் அவர்கள் உங்கள் வீட்டில் வெறும் 2 நாட்கள் தங்கினாலே போதும் நீங்கள் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
2. செல்ல பிராணிகளின் பாதுகாவலர்கள். பணக்கார இல்லங்கள் தொடங்கி சாதாரண வீடுகள் வரை செல்ல பிராணிகளை வளர்க்காத நபர்களே இல்லை. அப்படி வளர்ப்பவகள் திடீரென்று வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்தால் பிராணிகளை யாரிடம் விட்டு செல்வது என்று கவலைப்படுவார்கள். அப்படி கவலைப்படுபவர்கள் தான் உங்களின் முதலாளிகள்.முறையாக அதற்கான ரீஜிஸ்டரை முடித்துக் கொண்டு நீங்களும் பிராணிகளின் பாதுகாவலர்கள் ஆகலம். அதுவும் உங்களின் வீடு தேடி வந்து அவர்கள் பிராணிகளை விட்டு செல்வார்கள்.