scorecardresearch

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியுதவி; தமிழகத்திற்கு முன்னுரிமை

ஒருங்கிணைந்த 1 பில்லியன் டாலர் நிதியுதவியின் மூலம், நாடு முழுவதும் பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த, பிரதான் மந்திரி-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்திற்கு (PM-ABHIM) உலக வங்கி ஆதரவளிக்கும்

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியுதவி; தமிழகத்திற்கு முன்னுரிமை
உலக வங்கி (கோப்பு படம்)

PTI

இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உலக வங்கி தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இரண்டு கூடுதல் கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் உலக வங்கியும் இந்தியாவும் வெள்ளிக்கிழமையன்று கையெழுத்திட்டன.

இந்த ஒருங்கிணைந்த 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,200 கோடி) நிதியுதவியின் மூலம், நாடு முழுவதும் பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அக்டோபர் 2021 இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதன்மையான பிரதான் மந்திரி-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்திற்கு (PM-ABHIM) உலக வங்கி ஆதரவளிக்கும், என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: அது நேற்று, இது இன்று.. 16 சதவீதம் உயர்ந்த அதானி பங்குகள்

தேசிய அளவிலான சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் தவிர கூடுதலாக, ஆந்திரப் பிரதேசம், கேரளா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சுகாதார சேவை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ராவும், உலக வங்கியின் இந்திய இயக்குநருமான அகஸ்டே டானோ குவாமே கையெழுத்திட்டதாக அறிக்கை கூறியுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய், உலகெங்கிலும் தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை முன்னுக்குக் கொண்டு வந்தது, மேலும் தொற்றுநோய்க்கான தயார்நிலை உலகளாவிய பொது நன்மை என்பதை நினைவூட்டுகிறது என்று அகஸ்டே டானோ கோமே கூறினார்.

எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிராக நாட்டின் சுகாதார அமைப்புகளின் நெகிழ்வுத்தன்மை மற்றும் தயார்நிலையை அதிகரிப்பதற்கான இந்தியாவின் முடிவை இந்த இரண்டு திட்டங்களும் ஆதரிக்கின்றன, மேலும் இது திட்டங்களில் பங்கேற்கும் மாநிலங்களின் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மற்ற மாநிலங்களுக்கு நேர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்றும் அறிக்கை கூறியது.

ஆரோக்கியத்தில் இந்தியாவின் செயல்திறன் காலப்போக்கில் மேம்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் ஆயுட்காலம் 2020 இல் 69.8 ஆக உள்ளது, இது 1990 இல் 58 ஆக இருந்தது, இது நாட்டின் வருமான மட்டத்திற்கான சராசரியை விட அதிகமாக உள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (1,000 பிறப்புகளுக்கு 36), குழந்தை இறப்பு விகிதம் (1,000 பிறப்புகளுக்கு 30), மற்றும் தாய் இறப்பு விகிதம் (100,000 பிறப்புகளுக்கு 103) ஆகியவை இந்தியாவின் வருமான மட்டத்தின் சராசரிக்கு அருகில் உள்ளன, இது திறமையான பிறப்பு எண்ணிக்கை, நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் பிற முன்னுரிமை சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பிரதிபலிக்கிறது.

இந்திய மக்கள்தொகையின் ஆரோக்கியத்தில் இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், கோவிட்-19, பொது சுகாதாரத்தின் முக்கிய செயல்பாடுகளுக்கான புத்துயிர், சீர்திருத்தம் மற்றும் திறனை மேம்படுத்துதல், அத்துடன் சுகாதார சேவை வழங்கலின் தரம் மற்றும் விரிவான தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: World bank commits 1 billion to india for public healthcare infrastructure