Advertisment

மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்கிறீர்களா? மாணவர்கள் காப்பீட்டு திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!

You should know about students insurance and its uses in foreign universities: காப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதியளிக்கும் பெற்றோர்கள் அல்லது ஸ்பான்சர்கள் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், காப்பீட்டாளர் காப்பீட்டுத் தொகையின் அளவிற்கு மீதமுள்ள கட்டணத்தை செலுத்துவார்

author-image
WebDesk
New Update
USA, President Donald Trump, US international students visa policy, visa policy, Indian students in US, International students in US, Donald Trump, Indian Express

வெளிநாடு சென்று படிப்போருக்கு காப்பீடு மிகவும் அவசியமானது. மாணவர்கள் போதுமான காப்பீட்டை எடுத்துக்கொள்வது, அவர்களது பயணம் மற்றும் கல்வி ஆண்டு முழுவதும் அங்கு தங்குவதை உறுதி செய்யும்.

Advertisment

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அங்கு சேர்க்கைப் பெற்ற இந்திய மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோயால் பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழங்களில் சேர முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு, தடுப்பூசிகளின் வெளியீடு அவர்களின் சேர்க்கையை சாத்தியமாக்கியுள்ளது.

காப்பீடு ஏன்?

ஒன்று, உங்கள் பல்கலைக்கழகம் உங்களிடம் காப்பீடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடும். இதனால் நீங்கள், காப்பீடு பெறவில்லை என்றால், உங்கள் கல்வி கட்டணத்தின் ஒரு பகுதியாக மருத்துவ காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்.

ஒருவேளை பல்கலைக்கழகம் காப்பீட்டை கட்டாயப்படுத்தாவிட்டாலும், நீங்கள் காப்பீடு பெற்றால் பயனடைவீர்கள். நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது நோய்வாய்ப்பட்டால் உங்கள் வழக்கமான சுகாதார பாதுகாப்பு உங்களுக்கு உதவாது. வணிக அல்லது சுற்றுலா பயணிகளைப் போலல்லாமல், மாணவர்கள் வெளிநாடுகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள், மேலும் சில சமயங்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இந்த தொற்றுநோய்களில், அபாயங்கள் அதிகரித்துள்ளன. உதாரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுகாதார செலவினம் அதிகம், மேலும் நீங்கள் அமெரிக்காவில் கொரோனா அல்லது பிற நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டுமானால் உங்கள் குடும்பத்தின் சேமிப்பு மொத்தம் கரைந்துவிடும்.

கூடுதலாக, மாணவர் பயணக் காப்பீடு, வழக்கமான சர்வதேச பயண அட்டைகளைப் போலல்லாமல், தவறவிட்ட விமான இணைப்பு, பொருட்கள் அல்லது பாஸ்போர்ட் இழப்பு போன்ற பிற செலவுகளையும் செலுத்துகின்றன. காப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதியளிக்கும் பெற்றோர்கள் அல்லது ஸ்பான்சர்கள் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், காப்பீட்டாளர் காப்பீட்டுத் தொகையின் அளவிற்கு மீதமுள்ள கட்டணத்தை செலுத்துவார். நீங்கள் மருத்துவமனையில் சேரும்போது உங்கள் பெற்றோர்கள் வருகை தர வேண்டுமானால், இந்த காப்பீட்டு கொள்கைகள், உங்கள் விமானங்களின் ரிட்டர்ன் டிக்கெட்டுகளுக்கும் பணம் செலுத்துகின்றன.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இந்திய காப்பீடும்

நீங்கள் படிப்பதற்காக, இந்தியாவை விட்டு செல்லும் முன்பு வெளிநாட்டு மாணவர் அட்டைகளை வாங்குவது நல்ல யோசனையாகத் தெரிகிறது, ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில எச்சரிக்கைகள் உள்ளன. "அமெரிக்காவை தளமாகக் கொண்ட காப்பீட்டாளர்களுடன் இணைந்திருக்கும் சில பல்கலைக்கழகங்கள் இந்திய காப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு இந்திய காப்பீட்டுத் தொகையை அதிகமான பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிகிறது.

உங்கள் காப்பீட்டு அட்டையானது பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால், அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, உங்கள் காப்பீட்டு அட்டையில் அனைத்து தேவைகளும் இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் பல்கலைக்கழகத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இந்திய காப்பீட்டாளரிடமிருந்து நீங்கள் ஒரு அட்டையைப் பெற்றால், உங்கள் பிரீமியம் செலவினத்தில் குறிப்பிடத்தக்க சேமிப்புகளைச் செய்யலாம். இந்தியக் கொள்கைகள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்டதை விட கணிசமாக மலிவானவை. எனவே, நீங்கள் முதலில் பல்கலைக்கழகக் கொள்கையின் அம்சங்களைப் பார்த்து, இந்திய காப்பீட்டாளரிடமிருந்து சமமானதைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

மேலும், கொரோனா காரணமாக பல்கலைக்கழகங்களால் வசதி செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையின் பிரீமியங்கள் கடந்த ஒரு வருடமாக உயர்ந்து வருகிறது. ஆனால், இந்திய காப்பீட்டாளர்களின் பயண பிரீமியங்கள் மாறாமல் உள்ளன.

உங்கள் பல்கலைக்கழகம் அவர்களுடைய காப்பீட்டு திட்டகளை தேர்ந்தெடுக்க வலியுறுத்தினால், உங்கள் காப்பீட்டு அட்டையின் போதுமான அளவு குறித்து அதிகாரிகளை நம்ப வைக்க முயற்சி செய்யலாம். உங்கள் பல்கலைக்கழகத்திற்கு கட்டாயக் கொள்கை இருந்தாலும், மாற்று, சமமான கொள்கையை வாங்க முடியுமா என்று விசாரிக்கலாம். உங்களிடம் போதுமான மாணவர் சுகாதார காப்பீடு இருப்பதைக் காட்ட நீங்கள் ஒரு படிவத்தை அல்லது பாதுகாப்பு ஆவணங்களின் உறுதிப்பாட்டை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

சில காப்பீட்டு கொள்கைகள் பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து உள்ளூர் காப்பீட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு விதிமுறைகள் சிறப்பாக உள்ளன. இவை பல்கலைக்கழகங்கள் குறிப்பிடும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. அவ்வாறானவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.

மாணவர் காப்பீடு அட்டை நிதி பாதுகாப்பை வழங்கும் போது, ​​குறிப்பாக கொரோனா போன்ற செலவுகள் வரம்புக்குள் வராமல் இருக்கலாம். இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் உள்வரும் சர்வதேச மாணவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட செலவுகளை மாணவர் காப்பீடு அட்டை ஈடுகட்டுகின்றன. மற்ற நாடுகளில், தனிமைப்படுத்தப்பட்ட செலவுகளை மாணவர் ஏற்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களில் உள்ள தங்குமிடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குகின்றன, சில ஹோட்டல்களுடன் இந்த நோக்கத்திற்காக இணைகின்றன.

பெரும்பாலான நாடுகளில், தடுப்பூசி இலவசம். இருப்பினும், சில நாடுகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் வெளிநாட்டு மாணவர் காப்பீடுகள் அதை ஈடுகட்ட முடியும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் அல்லது சட்டத்தை மீறுவது அல்லது சட்டத்தை எதிர்ப்பது போன்றவற்றிலிருந்து எழும் சட்ட செலவுகள் இந்த வரம்புக்குள் வராது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Students Business Insurance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment