மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட் ஏன்? 4 காரணங்கள்

Mutual Fund Vs Stock: Four reasons for choosing mutual funds over buying stocks: பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைத் தொடுவதால் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இளம் முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளில் பணத்தை வைக்கிறார்களா அல்லது பரஸ்பர நிதிகள் மூலமா என்பது பெரிய கேள்வி.

Mutual Fund Vs Stock: Four reasons for choosing mutual funds over buying stocks: பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைத் தொடுவதால் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இளம் முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளில் பணத்தை வைக்கிறார்களா அல்லது பரஸ்பர நிதிகள் மூலமா என்பது பெரிய கேள்வி.

author-image
WebDesk
New Update
மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட் ஏன்? 4 காரணங்கள்

பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைத் தொடுவதால் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இளம் முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளில் பணத்தை வைக்கிறார்களா அல்லது பரஸ்பர நிதிகள் மூலமா என்பது பெரிய கேள்வி. தனிப்பட்ட பகுத்தறிவுக்கு உட்பட்ட, முதலீட்டின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பங்குகளை (Stocks) விட கொஞ்சம் முன்னிலையில் இருப்பதற்கான சில காரணங்கள் இங்கே.

முதலீட்டு இலாகா பல்வகைப்படுத்தல்

Advertisment

பல்வேறு வகையான பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் இது ஒரு குறிப்பிட்ட பங்குகளில் செறிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது, மேலும் ஒன்று அல்லது இரண்டு பங்குகள் வேலை செய்யாவிட்டால் அல்லது இழப்புகளைச் சந்தித்தால் இதுபோன்ற செயல்பாடுகள் இழப்புகளைத் தணிக்கும். ஆனால் பங்குகளில் நேரடி முதலீடு செய்தால், ஒருவர் சராசரியாக 10 க்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய மாட்டார், இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்பட்டால் அவரது முதலீட்டில் பெரும் அபாயங்கள் ஏற்படும்.

தொழில்முறை மேலாண்மை

மியூச்சுவல் ஃபண்டுகள் தொழில் ரீதியாக பங்கு மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் நிறைய ஆராய்ச்சி செய்துகின்றனர். மேலும் பல்வேறு பங்குகள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர். பின்னர் அதிக லாபம் ஈட்டக்கூடிய அல்லது எதிர்காலத்தில் வளர்ச்சியைக் குறிக்கும் அத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளை அடையாளம் கண்டு பிடிக்கின்றனர். அவர்கள் நிதி அறிக்கைகள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய பிற தேவையான தகவல்களைப் படிக்கின்றனர், மேலும் அவர்கள் இடர் மேலாண்மை செயல்முறையை நன்கு அறிந்தவர்கள். மறுபுறம், பங்குகளில் முதலீடு செய்வது என்பது ஒரு நபர் பங்குச் சந்தையைத் தானே படிக்க வேண்டும், மேலும் அத்தகைய பங்குகள் பற்றி தலை முதல் கால்வரை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதனால் தான் ஆபத்துக்களைக் கண்டறிதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவை ஒரு தொடக்க முதலீட்டாளருக்கானது அல்ல என்பதற்கான காரணம் இதுதான்.

ஒழுக்கமான அணுகுமுறை

ஒரு பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் பணத்தை முதலீடு செய்வதில் மிகவும் முறையான கட்டமைப்பு மற்றும் தொழில்முறை போன்ற ஒழுக்கமான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது, பின்னர் இங்கு பல்வேறு வகையான நிதிகள் குறிப்பிட்ட குறிக்கோள்களுடன் ஓய்வூதியம், குழந்தைகளின் திட்டங்கள் போன்றவற்றிற்காக பங்கு, கடன், கலப்பினம், தங்கம் போன்ற வடிவங்களில் உள்ளன. உங்கள் முதலீட்டு எல்லையைப் பொறுத்து, நீங்கள் பண முதலீடு அல்லது கார்ப்பரேட் பத்திர நிதிகளுக்கு செல்லலாம். நீங்கள் முறையான முதலீட்டு திட்டம் (எஸ்ஐபி) வழியிலும் செல்லலாம்.

வரி சலுகைகள்

Advertisment
Advertisements

பரஸ்பர நிதிகளில் சில திட்டங்களில் முதலீடு செய்யும் போது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் கிடைக்கும் விலக்குகளின் வடிவத்தில் நன்மைகள் கிடைக்கின்றன, எ.கா., ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம், இதில் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் நேரடி பங்கு முதலீட்டில் அத்தகைய நன்மை எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரம் இதற்கு எஸ்.டி.டி, ஈவுத்தொகை விநியோக வரி, மூலதன ஆதாய வரி, தரகு கட்டணங்கள் போன்ற சில கட்டணங்களை ஒருவர் செலுத்த வேண்டும். பரஸ்பர நிதிகளில், ஒருவர் நிதி மேலாண்மை கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஒரு முதலீட்டாளருக்கு பல்வேறு பங்குகள் மற்றும் அதன் நிதித் தகவல்களைப் படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் நேரம் இருந்தால், அவர் தனது சொந்த பங்கு முதலீட்டு இலாகாவை உருவாக்க முடியும். ஆனால் பல்வேறு பங்குகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய செய்திகளைப் புரிந்துகொள்வதிலும் மதிப்பீடு செய்வதிலும் போதுமான ஆராய்ச்சியை மேற்கொள்ளவோ ​​அல்லது போதுமான நேரத்தை அர்ப்பணிக்கவோ முடியாவிட்டால், உங்கள் பணத்தை தொழில் ரீதியாக நிதி மேலாளர்களால் கவனிக்க வேண்டும் என்று விரும்பினால், நிதி மேலாளர்களிடம் அளிக்கலாம். அவர்களின் நோக்கம் குறிப்பாக பன்முகப்படுத்தப்பட்ட முறையில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு நிலையான வருமானத்தை உங்களுக்கு வழங்குவதற்கு உதவ வேண்டும். இதுவே மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Deposit Scheme Money

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: