/indian-express-tamil/media/media_files/DIWnlaBP5NcuWze2GTqC.jpg)
தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற தகவல் பரவிய நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச்1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25ம் தேதி முடிவடைந்தது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி தற்போதுநடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.