எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் 2025: மாணவிகளின் கை ஓங்கியது; மாணவர்களை விட அதிக தேர்ச்சி

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 10ஆம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் மே 16, 2025 அன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 10ஆம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் மே 16, 2025 அன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பள்ளிகளில் சிறப்புக் குழு; ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு நடவடிக்கை

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 10ஆம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் இன்று (மே 16, 2025) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Advertisment

தமிழ்நாடு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு (SSLC) அல்லது 10ஆம் வகுப்பு தேர்வு 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற்றது. 16.05.2025 ஆன இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 8,71,239 மாணவர்கள் மொத்தம் தேர்வு எழுதினர். அதில் 4,35,119 மாணவியர்களும் 4,36,120 மாணவர்களும் தேர்வு எழுதினர். 15,652 தேர்வுக்கு வரவில்லை. 

10 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 8,17,261 (93.80%) தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவியர் 4,17,183 (95.88%) மாணவர்கள்: 4,00,078 (91.74%) ஆகும். மாணவர்களை விட 4.14% அதிகமான மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு SSLC தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாக அதிக தேர்ச்சி சதவீதத்தைக் காட்டுகின்றன. இதில் மாணவர்களை விட மாணவியர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisment
Advertisements

தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4,35,119 பேர் மாணவிகளும், 4,36,120 பேர் மாணவர்களும் ஆவர்.

கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,94,264 ஆகும். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,18,743. தேர்ச்சி சதவீதம் 91.55% ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சியை விட இந்த ஆண்டு 2.25% தேர்ச்சி சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டு 8,71,239 பேர் தேர்வு எழுதி 8,17,261 தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.80% ஆகும். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.88% மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 91.74% ஆகும். 

பள்ளி வாரியாக தேர்ச்சி சதவீதம்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை12,485 ஆகும். இதில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,555, உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4,930 ஆகும். மொத்தம் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் மட்டும் 1,867 ஆகும்.

அரசுப் பள்ளிகள் 91.26%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.63%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.99% ஆகும். தனியார் சுயநிதிப் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவீதத்தையும், அரசுப் பள்ளிகள் குறைந்த தேர்ச்சி சதவீதத்தையும் பெற்றுள்ளன. மேலும், 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

இருபாலர் பள்ளிகள்  94.06%, பெண்கள் பள்ளிகள் 95.36%, ஆண்கள் பள்ளிகள் 87.84% தேர்ச்சி சதவீதமாக உள்ளது. பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.52% அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22% அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடம் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

தமிழ் பாடத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.09% ஆகும்.     ஆங்கிலம் 346 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தேர்ச்சி சதவீதம் 99.46%  ஆக உள்ளது. அதேபோல    கணிதத்தில் 1996 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலு  96.57%  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியலில் 10838 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம்  97.90%   ஆகும். சமூக அறிவியலில் 10256  பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 98.49% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.     

பாடம் வாரியாகப் பார்க்கும்போது ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கணிதத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது.

தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் (SSLC) 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 1,867 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சி அடைந்துள்ளன.  அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம் 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலம் அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தையும், கணிதம் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதத்தையும் கொண்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள்:

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு SSLC தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவியர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.88% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை 4,17,183. மாணவர்கள் 91.74% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,00,078.

முதலிடத்தில் சிவகங்கை:

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.31%, விருதுநகர் 97.45%, தூத்துக்குடி 96.76%, கன்னியாகுமரி 96.66% மற்றும் திருச்சி 96.61% ஆகவும் உள்ளது. சிவகங்கை மாவட்டம் அதிகபட்ச தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 

10th Exam Exam Result

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: