scorecardresearch

காவலர் முதல் டி.எஸ்.பி வரை… தமிழக போலீசில் 3383 காலிடங்கள்; இந்த ஆண்டு நிரப்ப உத்தரவு

நடப்பு ஆண்டில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை (டிஎஸ்பி) நேரடியாக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

Tamilnadu Police
தமிழ்நாடு போலீஸ்

தமிழகத்தில், 615 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட காலியாக உள்ள மொத்தம் 3,383 காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இந்த ஆண்டு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை (டிஎஸ்பி) நேரடியாக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு (2022), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு மொத்தம் 3,552 காவலர்கள் மற்றும் 438 எஸ்ஐக்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 2021 இல் 11,812 கிரேடு-II கான்ஸ்டபிள்கள், சிறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாநில அரசு 2021-2022 ஆம் ஆண்டில் 91 துணைக் கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) நேரடியாக நியமித்தது, அவர்கள் இப்போது பயிற்சி பெற்று வருகின்றனர். 2023-ம் ஆண்டுக்கு 615 எஸ்.ஐ.க்கள், 2,599 போலீஸ் கான்ஸ்டபிள்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் மற்றும் ஆயுதப் படைப் பிரிவு, 106 தொழில்நுட்ப எஸ்.ஐ.க்கள், 63 கைரேகை எஸ்.ஐ.க்கள் எனப் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதனிடையே ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர்களிடம் 336 மனுக்களை போலீஸார் சேகரித்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய தண்டனைகளை மறுஆய்வு செய்து தீர்க்கக் கோரி காவல் துறையினர் 5,922 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 1, முதல் மார்ச் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் 5,179 மனுக்களை மாநில அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: 3383 tamil nadu police personnel to be recruited on this year