அவல நிலையில் அரசு கல்லூரிகள்: ஒரு வருடத்திற்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் 4,000 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமானதே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமானதே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
college students cutn

புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

Advertisment

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், விரைவில் பணி நியமனம் நிறைவடையும் என, உயர்கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மொத்தம் 65 பாடங்களில் காலியிடங்கள் உள்ளன; தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அதிக எண்ணிக்கையிலான, அதாவது 1,200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்வேறு கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டாயமான மாநில தகுதித் தேர்வு (SET) நடத்துவது உட்பட அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டதாக, கல்லூரி கல்வி இயக்ககத்தின் (DCE) ஒரு மூத்த அதிகாரி  பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்ததாக டிடிநெக்ஸ்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Advertisment
Advertisements

"இருப்பினும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவுகளை வெளியிட முடியவில்லை," என்று அவர் கூறினார், மேலும் அனைத்து சிக்கல்களும் விரைவில் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நியமனங்கள் விரைவில் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய கல்வி ஆண்டு தொடங்கிவிட்டதால், இந்த உதவிப் பேராசிரியர்களின் நியமனம் கல்லூரிகளில் நீண்ட காலமாக இருந்து வரும் காலியிடங்களை நிரப்புவதில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என்றும், இது 2025 ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். மேலும், சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை, வருகை விரிவுரையாளர்கள் பாடத்திட்டத்தை முடிப்பார்கள் என்பதால் வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) 2024 மார்ச் 14 ஆம் தேதி அறிவிப்பின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நேரடியாக நியமிப்பதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் 28 அன்று தொடங்கி ஏப்ரல் 29 அன்று முடிவடைந்தது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (AUT) துணைத் தலைவரான பி. திருநாவுக்கரசுவும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக உதவிப் பேராசிரியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறை தாமதமானதை சுட்டிக்காட்டினார்.

"வருகை விரிவுரையாளர்கள் தங்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரியதும் நியமன தாமதத்திற்கு ஒரு காரணம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சிக்கலை நிரந்தரமாகத் தீர்க்கவும், மாணவர்களின் நலனுக்காக காலியிடங்களை விரைவில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

Arts And Science College Teachers

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: