/indian-express-tamil/media/media_files/2025/08/25/kovai-story-students-2025-08-25-13-56-51.jpeg)
குழந்தைகளுக்கு சுயமாகவும், கூட்டு விளையாட்டு மூலமும் ஆர்வத்தை ஏற்படுத்தி கற்றலை இயல்பாக உருவாக்க கோவை ஐ.டி.சி. வெல்கம் ஹோட்டல் வளாகத்தில் விதை நிறுவனம் சார்பில் டியர் விதை-கதை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசு பள்ளிகளில் இருந்து வந்த 25 குழந்தைகளும், திருப்பூர் சாய் கிருபா அமைப்பிலிருந்து ஆட்டிசம் கொண்ட குழந்தைகளும் பங்கேற்றனர். இதில் குழந்தைப் பருவம் எப்படியிருந்தாலும், அதை கொண்டாட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பிரபல நடிகையும், கதை சொல்லியுமான ஜானகி சபேஷ் கலந்து கொண்டு கதையின் மூலம் குழந்தைகளையும் பெற்றோர்களையும் கற்பனை உலகிற்குள் அழைத்துச் சென்றார்.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் தோட்டப்பணி, தையல், கட்டுமானம், எளிய அறிவியல் சோதனைகள் போன்றவற்றில் ஈடுபட்டனர். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து மலர் கட்டி, கைப்பிரதி எழுதி, குறிப்பேடு தயார் செய்தனர்.
தொடர்ந்து விதை நிறுவனர் மைத்ரேயி, ”மாண்டிசோரி கல்வி (Montessori) குழந்தைகளை தங்கள் சொந்த வேகத்தில் வளர அனுமதிக்கிறது. கற்றலை மகிழ்ச்சியாகவும், குடும்பங்களை இணைக்கும் அனுபவமாகவும் மாற்றுகிறது. இந்த முறை பாரம்பரிய பாடத்திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த மாணவர் வளர்ச்சியை வளர்க்கிறது” என தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.