/tamil-ie/media/media_files/uploads/2022/11/Agnipath-exam.jpeg)
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் ராணுவ பணியில் இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று திருச்சி தேசியக்கல்லூரியில் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்றனர்.
நுழைவுத் தேர்வுக்கு 2,307 இளைஞர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனைக்கு பிறகு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான நுழைவுத் தேர்வு இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து மாலை 3 மணி வரை சுழற்சி முறையில் நடைபெற்றது. நேற்று நள்ளிரவு முதலே வாலிபர்கள் வரிசை கட்டியது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியதால் தேசியக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் தேர்வில் பங்கேற்றவர்களுக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.