தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 ஜூலை 25 ஆம் தேதி மாலை 05:45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
எனவே சட்டத் துறையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.