/indian-express-tamil/media/media_files/BsIEc2zf3HQLXOz2t4M6.jpg)
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பப் பதிவு ஆரம்பம்; அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற 6 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதேநேரம் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கல்லூரிகளில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகின்ற மே 10 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப் பள்ளிகளில் 5 ஆண்டு படிப்புக்கான விண்ணப்பம் மே 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மூன்றாண்டு சட்டப் படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த முழு விவரங்களுக்கு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் சட்டம் படிக்க விரும்புவர்கள் நேரடியாக இந்தப் படிப்புகளில் சேரலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.