Advertisment

அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்; அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு, புடவை அல்லது சுடிதார் அணிந்து இனி பள்ளிக்கு வரலாம்; அமைச்சர் அன்பில் மகேஷ்

author-image
WebDesk
New Update
student and teacher

ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு, புடவை அல்லது சுடிதார் அணிந்து இனி பள்ளிக்கு வரலாம்; அமைச்சர் அன்பில் மகேஷ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் கடந்த டிசம்பர்.19 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் கனவு ஆசிரியர்விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அன்பில் மகேஷ், “ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நாங்கள் இப்போது மேடையில் இருந்திருக்க முடியாது. சமுதாயத்தில் சிறந்து விளங்க முடியாது. மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டில் பேராசிரியர் பிறந்தநாளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம். அரசுப்பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு, புடவை அல்லது சுடிதார் அணிந்து இனி பள்ளிக்கு வரலாம்என தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Anbil Mahesh Teacher
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment