முறைகேடாக பணி; 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை: அண்ணா பல்கலை அதிரடி

பொறியியல் கல்லூரிகளில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அண்ணா பல்கலைக் கழகம் தீர்மானம்

author-image
WebDesk
New Update
anna university chennai

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அண்ணா பல்கலைக் கழகம்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Advertisment

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக தனியார் அமைப்பு ஒன்று தெரிவித்தது. பேராசிரியர்கள் விவரங்களை பார்த்து அதில் போலியாக, முறைகேடாக பணியில்  சேர்ந்தவர்கள் விவரங்களை அண்ணா பல்கலைக் கழகம் சேகரித்தது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதற்காக 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட சுமார் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு சிண்டிகேட் நிர்வாகிகளும் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: