அண்ணா பல்கலை.யில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் தற்காலிக நியமனங்கள்: ஆசிரியர்கள் அதிருப்தி

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களையும், பிற துறைகளின் நிபுணர்களையும் தற்காலிக அடிப்படையில் நியமிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களையும், பிற துறைகளின் நிபுணர்களையும் தற்காலிக அடிப்படையில் நியமிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
anna university xyz

அண்ணா பல்கலை.யில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் தற்காலிக நியமனங்கள்: ஆசிரியர்கள் அதிருப்தி

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு 'பேராசிரியர் எமரிட்டஸ்' என்ற பெயரிலும், மற்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு 'பணிசார்ந்த பேராசிரியர்' மற்றும் 'இணைப் பேராசிரியர்' என்ற பெயரிலும் தற்காலிகப் பணியிடங்களை நியமிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. 

Advertisment

ஓய்வுபெற்ற மத்திய/மாநில அரசுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு 'பேராசிரியர் எமரிட்டஸ்' பதவியும், தொழில், ஆராய்ச்சி மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு 'பணிசார்ந்த பேராசிரியர்' மற்றும் 'இணைப் பேராசிரியர்' பதவிகளும் வழங்கப்பட உள்ளன. இந்தத் தற்காலிகப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் பெறப்பட்டன. தற்போது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

சம்பளம் & கால அளவு:

பேராசிரியர் எமரிட்டஸ்: மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 70,000 வரை. அதிகபட்சமாக 2 செமஸ்டர்கள் பணியாற்றலாம்.

பணிசார்ந்த பேராசிரியர்: மாதம் ரூ. 2 லட்சம் வரை.

பணிசார்ந்த இணைப் பேராசிரியர்: மாதம் ரூ. 1.5 லட்சம் வரை.

இந்த நிபுணர்களும் அதிகபட்சமாக 2 செமஸ்டர்கள் மட்டுமே பணிபுரிவார்கள்.

பணிகள்: மாணவர்களுக்குப் பாடங்கள் எடுப்பது, வழிகாட்டுவது, துறைத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தொழில்-கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பணிகளைச் செய்வார்கள்.

Advertisment
Advertisements

சர்ச்சை: 'பேராசிரியர் எமரிட்டஸ்' பதவியை நியமிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்புகள் கிளம்பின. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறிப்பதாக பலர் சுட்டிக்காட்டினர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏப்.2023 வரையிலான அதிகாரபூர்வ தரவுகளின்படி, 93 பேராசிரியர், 117 இணைப் பேராசிரியர் மற்றும் 168 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், இந்த தற்காலிக நியமனங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை தடுக்கும் என ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறைந்த சம்பளத்தில் அதே வேலைகளைச் செய்ய இளம் ஆசிரியர்கள் இருக்கும்போது, அதிக சம்பளத்தில் இந்தத் தற்காலிகப் பணியிடங்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: