New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Untitled-23.jpg)
பேங்க் ஆஃப் பரோடாவில் உதவியாளர் வேலை வாய்ப்பு; 500 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda) அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
OFFICE ASSISTANT (PEON)
காலியிடங்களின் எண்ணிக்கை: 500
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அலுவலக மொழியை பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.05.2025 அன்று 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,500 – 37,815
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bankofbaroda.in/career/current-opportunities/recruitment-of-office-assistant-in-sub-staff-cadre-on-regular-basis என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.600. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.100
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.