Advertisment

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் 2024-25: 10-ம் வகுப்பில் திறன் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் இப்படி ஒரு மாற்றம்!

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பில் வழக்கமான பாடங்களான அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களைப் படிப்பதற்கு போராடும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
cbse exam

சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள 2024-25-ம் கல்வியாண்டிற்கான புதிய பாடத்திட்டம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பில் வழக்கமான பாடங்களான அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களைப் படிப்பதற்கு போராடும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Advertisment

சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள 2024-25-ம் கல்வியாண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ், இந்த மூன்று கட்டாயப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அதைத் திறன் பாடத்துடன் மாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாணவர் அறிவியல், கணிதம் அல்லது சமூக அறிவியலில் தோல்வியடைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட திறன் பாடத்தில் தேர்ச்சி பெற்றால், தோல்வியடைந்த பாடம் மாற்றப்பட்டு, பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் அதற்கேற்ப சரிசெய்யப்படும்.

அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் போன்ற வழக்கமான பாடங்களைப் படிப்பதற்கு போராடும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கையாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் புதிய கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பில் இந்த மூன்று கட்டாயப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தவறிய மாணவர்கள் இப்போது அதை திறன் பாடத்துடன் மாற்றுவதற்கான விருப்பம் (Option) உள்ளது.

“ஒரு மாணவர் மூன்று கட்டாயப் பாடங்களில் (அதாவது அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல்) ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்து, திறன் பாடத்தில் (ஆறாவது விருப்பப் பாடமாக வழங்கப்படும்) தேர்ச்சி பெற்றால், அந்த பாடம் திறன் பாடத்தால் மாற்றப்படும். பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வுகள் அதன்படி கணக்கிடப்படும்” என்று சி.பி.எஸ்.இ மேல்நிலை பாடத்திட்டம் 2024-25 கூறுகிறது.

ஒரு மாணவர் அவர்கள் எடுக்கும் முதல் ஐந்து பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப் பாடத்தில் தோல்வியடைந்தால், அது அவர்களின் ஆறாவது பாடமாக (திறன் பாடங்கள் வழங்கப்படாவிட்டால்) அல்லது ஏழாவது பாடமாக (விருப்பப்பட்டால்) அவர்கள் தேர்ந்தெடுத்த மொழியுடன் மாற்றப்படும். 

"ஒரு மாணவர் ஏதேனும் ஒரு மொழிப் பாடத்தில் தோல்வியுற்றால், முதல் ஐந்து பாடங்களில், அது ஆறாவது பாடமாக எடுக்கப்பட்ட மொழியால் மாற்றப்படும் (திறன் பாடங்கள் வழங்கப்படவில்லை என்றால்) அல்லது ஏழாவது பாடமாக (விரும்பினால்), அவர் அல்லது அவள் இந்த மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்குப் பிறகு, இந்தி அல்லது ஆங்கிலம் முதல் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்ற மொழியாக இருக்கும்" என்று புதிய பாடத்திட்டம் கூறுகிறது.

மேலும், அனைத்து மாணவர்களும் எட்டாம் வகுப்பு வரை மூன்று மொழிகளைப் படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

எட்டாம் வகுப்பில் மூன்றாவது மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியாமல், ஒன்பதாம் வகுப்பிற்கு சென்ற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பின் இறுதியில், 8-ம் வகுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்ட அதே பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தி அந்தந்தப் பள்ளிகளால் தேர்வு நடத்தப்படும். 

மேலும், ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெற முடியாதவர்கள், மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறாத பட்சத்தில் வகுப்பில் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு (CWSN) மூன்றாம் மொழிப் படிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment