Advertisment

பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி வழக்கு; சி.பி.எஸ்.இ எதிர்ப்பு

பொதுப் பாடத்திட்டம், பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்; சி.பி.எஸ்.இ எதிர்ப்பு

author-image
WebDesk
New Update
cbse students2

சி.பி.எஸ்.இ மாணவர்கள் (பிரதிநிதித்துவ படம்)

இந்தியா முழுவதும் பொதுவான பாடத்திட்டம் மற்றும் பாடமுறையை அறிமுகப்படுத்தக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) எதிர்த்துள்ளது. பொது பாடத்திட்டம் என்பது "உள்ளூர் சூழல், கலாச்சாரம் மற்றும் மொழி" ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று சி.பி.எஸ்.இ கூறியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: CBSE opposes PIL in Delhi HC seeking introduction of common syllabus, curriculum

"உள்ளூர் வளங்கள், கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய தேசிய கட்டமைப்பு உள்ளது. ஒரு குழந்தையால் பள்ளிக்கு வெளியே அவரது வாழ்க்கையுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய பாடத்திட்டத்துடன் நன்றாக தொடர்பு கொள்ள முடியும். எனவே, பாடத்திட்டங்கள் மற்றும் பிற கல்வி வளங்களின் பன்முகத்தன்மை ஒரு முக்கிய பொதுவான அம்சத்துடன் கூடுதலாக விரும்பத்தக்கது" என்று CBSE கூறியது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (NCERT) குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசால் தேசிய பாடத்திட்டத்தின் கட்டமைப்பை தயாரிப்பதற்கான கல்வி ஆணையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் பொருத்தமான பாடத்திட்டம் மற்றும் கட்டமைப்பைத் தயாரிக்க பள்ளிக் கல்வியில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் அறிவித்துள்ளதாக சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) அல்லது மாநில கல்வி நிறுவனம் (SIE)

"NCERT தேசிய கல்விக் கொள்கையின் (NEP) பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது" என்று CBSE தெரிவித்துள்ளது. NCERT பள்ளிக் கல்வியின் வெவ்வேறு நிலைகளில் பள்ளி பாடங்களில் மாதிரி பாடத்திட்டங்களையும் பாடப்புத்தகங்களையும் உருவாக்குகிறது. பாலினம், மதிப்புக் கல்வி, உள்ளடக்கிய கல்வி மற்றும் பல முக்கிய கவலைகளை இது பார்வையில் வைத்திருக்கிறது.

பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை, எனவே சம்பந்தப்பட்ட மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு பாடத்திட்டம் மற்றும் கட்டமைப்பை வகுத்து தேர்வுகளை நடத்த வேண்டும்.

பொது நல மனுவில், தற்போதைய முறையில் அரசியலமைப்பின் 14 முதல் 16 வரையிலான பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்காது. RTE சட்டத்தின் பிரிவுகள் 1 (4) மற்றும் 1 (5) இருப்பதாலும், தாய்மொழியில் பொதுவான பாடத்திட்டம் இல்லாததாலும் அறியாமையை வளர்ப்பதற்கும், நிலைநிறுத்துவதற்கும், அடிப்படைக் கடமைகளை அடைவதில் தாமதம் ஏற்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

RTE சட்டத்தின் கீழ் மதரஸாக்கள், வேத பாடசாலைகள் மற்றும் மத அறிவை வழங்கும் கல்வி நிறுவனங்களைத் தவிர்த்துள்ள விதிகளை எதிர்த்தும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment