சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்கப்பட இருக்கிறது.
வாரியத்தின் தேர்வுக் குழுவால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.
“2019-ம் ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும், சான்றிதழும் ஒன்றாக வழங்கப்படும்” என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.
இந்த ஆவணம் சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்கள் தங்களின் தேவையை தெரியப்படுத்தி இதன் நகலை வாரியத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போதும் போல், மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்.
மேம்பட்ட சோதனைக்காக (Improvement examination) தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அந்தப் பாடத்தின் மதிப்பெண் மட்டும் அறிக்கையாக வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Cbse to issue single document for 10th students
ராமஜென்ம பூமி நன்கொடை: ரூ. 11,000 வழங்கிய திமுக எம்.எல்.ஏ மஸ்தான்
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம்!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!