சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் ஒரே ஆவணமாகிறது

2019-ம் ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும், சான்றிதழும் ஒன்றாக வழங்கப்படும்.

2019-ம் ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும், சான்றிதழும் ஒன்றாக வழங்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE Class 12th Result, CBSE 12th Result 2019

cbse board exams, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்கப்பட இருக்கிறது.

Advertisment

வாரியத்தின் தேர்வுக் குழுவால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

“2019-ம் ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும், சான்றிதழும் ஒன்றாக வழங்கப்படும்” என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.

இந்த ஆவணம் சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்கள் தங்களின் தேவையை தெரியப்படுத்தி இதன் நகலை வாரியத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போதும் போல், மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்.

மேம்பட்ட சோதனைக்காக (Improvement examination) தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அந்தப் பாடத்தின் மதிப்பெண் மட்டும் அறிக்கையாக வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

 

Cbse

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: