Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு:-
மத்திய பணியாளர் தேர்வாணைத்தால் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் உதவி பிரிவு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் தபால் துறையில் உதவியாளர் போன்ற பல்வேறு நிலைகளில் 7500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணிகளுக்கான கல்வித் தகுதி இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 01.08.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2023 ஆகும். இதுகுறித்து கூடுதல் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.100ஃ- ஆகும். பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பணிக்காலியிடங்களுக்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 03.05.2023 அன்று துவக்கப்பட உள்ளது.
மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் தேர்விற்கு விண்ணப்பித்தமைக்கான விவரங்களோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9486821148 என்ற எண்ணில் வாட்சப் மூலமாகவோ தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil