பள்ளிகளில் முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த திட்டம்; சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளுக்கு 15 முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி திட்டம். இவர்களுக்கு மாதம் 30000 ரூபாய் சம்பளம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியமர்த்த முடிவு

சென்னை மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளுக்கு 15 முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி திட்டம். இவர்களுக்கு மாதம் 30000 ரூபாய் சம்பளம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியமர்த்த முடிவு

author-image
WebDesk
New Update
TN School Reopen Date 2024 Change latest updates in tamil

சென்னை மாநகராட்சி பள்ளிகளில், தடம்மாறும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Advertisment

உறவுகள், போதைப்பொருள், மது, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் கல்வியில் இருந்து விலகிச் செல்வதாக சென்னை மாநகராட்சி பள்ளிகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளுக்கு 15 முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் 30000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். இவர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் பணியமர்த்தப்பட உள்ளனர் என டி.ஓ.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பணிச்சுமையில் இருக்கும் ஆசிரியர்களால், மாணவர்களுக்கு போதிய ஆலோசனை வழங்க முடிவதில்லை. எனவே மாணவர்களின் கல்வி தடைபடுவதை தடுக்கும் வண்ணம் ஆலோசகர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

“தொற்றுநோய்க்குப் பிறகு ஆசிரியர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் பாடங்களை முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதேநேரம், தொற்றுநோய்க்குப் பிறகு மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்துள்ளது, எனவே எங்களுக்கு ஆலோசகர்கள் தேவை" பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அருணோதயா மற்றும் SCARF (Schizophrenia Research Foundation) போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சென்னையில் உள்ள சில பள்ளிகளில் பங்கு வகிக்கின்றன. வட சென்னையில் உள்ள 22 மாநகராட்சி பள்ளிகளில் தலா ஒரு அருணோதயா சமூக சேவகர் பணியாற்றி வருகிறார். இந்த ஆலோசகர்கள் ஒவ்வொரு வாரமும் வந்து காதல், மோகம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி பேசுவார்கள். அவர்கள் குழந்தைகளை ஆலோசகர்களுக்கு ஒருவரையொருவர் அமர்வுகளுக்கு அனுப்புகிறார்கள் என்று அருணோதயாவின் நிர்வாக இயக்குனர் விர்ஜில் டி சாமி கூறினார்.

"மாணவர்கள் மட்டுமின்றி குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்று சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Greater Chennai Corporation School

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: